Thursday, August 9, 2007

கிரெடிட் கார்டு - வழக்கு மனு விவரம்

சென்னையைச் சேர்ந்த சமூக-பொருளாதார நீதிக்கான மையம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கிற்கான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூக-பொருளாதார நீதிக்கான மையம் சார்பில் www.CreditCardWatch.org என்ற இணையதளம் மூலமாகவும், பொதுநிகழ்ச்சிகள், பத்திரிகைகள் வாயிலாகவும் கிரெடிட் கார்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இதன்மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தில் கிரெடிட் கார்டு குறித்த பல பிரசினைகளுக்கும், கிரெடிட் கார்டின் விதிமுறைகள் குறித்து மக்களுக்கு உரிய முறையில் அறிவிக்கப்படாததே காரணம் என்று தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் பலருக்கும் ஆங்கிலமோ, இணையதளமோ அதிகம் அறியப்படாத ஒன்றாக உள்ளது.

எங்கள் ஆய்வில் வங்கிப்பணிகள நெறிப்படுத்தும் அதிகாரம் படைத்த இந்திய ரிசர்வ் வங்கி, கிரெடிட் கார்டு வணிகத்தை நெறிப்படுத்த முதன்மை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கிரெடிட் கார்டை விற்பனை செய்தல், கணக்குகள் பராமரித்தல், வட்டி மற்றும் இதர கட்டணங்களை உரியமுறையில் தெரிவித்தல், தவறான பில்களை அகற்றுதல், விற்பனை மற்றும் வசூல் முகவர்களை பயன்படுத்தல், நுகர்வோர் தனிமையையும் ரகசியத்தையும் பாதுகாத்தல், முறையான கடன் வசூல் முறைகள், குறைதீர்க்கும் வசதி உள்ளிட்ட நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அம்சங்களயும் நடமுறைப்படுத்துவது அனைத்து வங்கிகளுக்கும் கட்டாய கடமையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் கிரெடிட் கார்டு வணிகத்தின் நடைமுறையின் பெரும்பகுதி அவுட்சோர்ஸிங் முறையில் வேற்று நபர்களின் பொறுப்பில் விடப்படுகிறது. அந்த அவுட்சோர்ஸிங் நிறுவனத்தின் பணியாளர்கள் விற்பன/வசூல் இலக்கை அடைவதற்காக கிரெடிட் கார்டு குறித்த அரைகுறையான மற்றும் தவறான தகவல்களை நுகர்வோர்களுக்கு வழங்குகின்றனர். கிரெடிட் கார்டின் விதிமுறைகள் அனைத்தும் மிகவும் சிக்கலான மொழிநடையில், மிகவும் மங்கலான வண்ணத்தில், மிகச்சிறிய எழுத்தில் விண்ணப்பத்தின் பின்புறத்திலேயே அச்சிடப்படுகிறது. விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டபின் அது வங்கி நிர்வாகத்திடம் சென்று விடுவதால் அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நுகர்வோர் அறிய முடிவதில்லை.

கிரெடிட் கார்டு பில்களை சாமானியர்கள் புரிந்து கொள்ளமுடிவதில்லை. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யாத பல செலவினங்கள் பில்லில் இடம் பெறுகின்றன. இது குறித்த புகார்களை யாரிடம் தெரிவிப்பது என்பது யாருக்கும் தெரிவதில்லை. தொலைபேசி மூலம் புகார் செய்தால் அடையாளம் சொல்லாத சில நபர்கள் புகார்கள விசாரிக்கின்றனர். எனினும் புகார்கள பதிவு செய்ய எந்த முறையான அமைப்பும் இல்லாத நிலையில் வாடிக்கையாளர்களின் நியாயமான குறைகளை தீர்க்க வழி இல்லாமல் போகிறது.

கிரெடிட் கார்டு வணிகத்தின் இறுதிக் கட்டமான கடன் வசூல் நடவடிக்கையே பல வாடிக்கயாளர்களின் மோசமான அனுபவமாக மாறிவிடுகிறது. கிரெடிட் கார்டு வசூலுக்காக நியமிக்கப்படும் குண்டர்கள் வாடிக்கயாளர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைதல், மிரட்டுதல், ஆட்கடத்தல், சட்டவிரோதமாக அடைத்துவைத்தல், பெண்களின் கண்ணியம் குறையும் வகையில் நடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த தொல்லை காரணமாக சில வாடிக்கையாளர்கள் தற்கொலை முடவை தேர்ந்தெடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கிரெடிட் கார்டு கடன் தவணையை ஒரு வாடிக்கையாளர் கட்டத்தவறிவிட்டால் அவரது பெயரை சிபில் என்ற கடன் தகவல் மையத்திற்கு வங்கிகள் அனுப்பி விடுகின்றன. பிறகு அந்த நுகர்வோர் எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. சிபில் அமைப்பில் ஒரு வாடிக்கையாளரின் பெயரை பதிவு செய்யுமுன் அந்த வாடிக்கையாளருக்கு அது குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அது நிறைவேற்றப்படுவதில்லை. மேலும் வாடிக்கையாளரின் நியாயமான குறைகளை தீர்க்க வழியில்லாத நிலையில் ஒரு வாடிக்கையாளரின் பெயரை சிபில் அமைப்பில் பதிவு செய்து அவருக்கு மற்ற வங்கிகளில் கடன்பெற முடியாத நிலையை ஏற்படுத்துவது சமூக அநீதியாகும்.

வங்கித்துறைகளுக்கு பொறுப்பான மத்திய நிதி அமைச்சகம், நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், வங்கிகள் சர்ச்சைக்கிடமான வகையில் விதிக்கும் தாமத கட்டணம், கடன் எல்லை தாண்டியதற்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கும் 4% சேவை வரி விதிக்கிறது. ஏற்கனவே வங்கிகளின் நியாயமற்ற கட்டணங்களால் அல்லலுறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வரி கூடுதல் சுமையாகிறது.

விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் கடன் அளிக்க மறுக்கும் இந்த வங்கிகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு கடன்களை வாரிவாரி வழங்குவதே அவர்களிடம் அநியாய வட்டி வசூலித்து பெரும் லாபம் ஈட்டவே என்று கருத இடமுள்ளது.

எனவே,

(அ) அனைத்து வங்கிகளிலும் பிராந்திய அளவில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் அமைப்பு நிறுவ வேண்டும்.

(ஆ) ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கை குறித்து விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.

(இ) கிரெடிட் கார்டின் விதிமுறைகள், பில் விவரங்கள் ஆகிய அனைத்து விவரங்களயும் தமிழில் தர வேண்டும்.

(மனுவின் முழுமையான ஆங்கில வடிவத்திற்கு www.CreditCardWatch.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்)

-மக்கள் சட்டம் குழு.

6 comments:

Anonymous said...

color colorஆ எழுதினால் வாசிப்பவருக்கு சிரமம் அளிக்கும். கருப்பு எழுத்துகளையே பயன்பட்டுத்துங்கள். நன்றி

MGR GLOBAL SOCIETY said...

sir
I welcome this great step and i fully admire such noble efforts and i want to promote such organisations..
I wish to submit some shocking card statements by ICICI and Standard Chart Bank Cards which i used two years Back...But still they want money after sucking huge ...
My request is we must get direction from court that Each Credit Card holder should be furnished a coonsolidated statements..
Information act must be applied and all credit card companies must reveal how much they collected from Each card holder by way of interst ...and they must return such excess and illegal collection amounts must be refunded to card holdrs..
if this is followed I am sure Every credit card holder would be getting big Jackpots and They must surrender 50% of such amonts to this organisations so that future safety is well protected by our Eminent Lawers...
S.A.Alagarsamy
www.mgrbiodiesel.com
Chennai-40
still fighting with ICICI and Standard charted Cards

Anonymous said...

I fully appreciate the effort and wish the effort and the persons involved in this great common cause a big success.

Anonymous said...

இன்னா அண்த்தே, இந்த நூஸு இன்னிக்கு மார்னிங்கால இண்டு பேப்பர்ல போட்டிருக்கான்.

ஏங் இம்மாங் லேட்டு.

கொஞ்சங் ஜுகுர்ரா வேலசெய்யத்தாவல...?

Anonymous said...

I am aware of your website thru the Ananda Vikatan news. I am an officer working in a nationalised bank. I am very much impressed by your activities. And I am very happy to know that there are some guys to monitor the banking mechanism.
I can help you, but it is unofficial. I couldnot reach you thru the phone number which you have given in bottom side of the blog. I hope you are enjoying the Holiday. I'll call you later.
We have a plenty of work to do.
With blessings.
NRK.

மக்கள் சட்டம் said...

Respected Mr NRK.
Thanks for your comments.
We welcome your cooperation with us.
You may please contact us through the mail ID given below.
Or leave your mail id in this column.

Thanking you.

Makkal Sattam friends.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!