முழுநேரக்கல்வியில் படிப்பதற்கு தேவையான வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் கல்வியை தொடருவதற்கு அஞ்சல் வழிக்கல்வி என்ற முறை அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்த முறையில் படித்து முன்னேறியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் இணையம் மூலமாகவும் இந்த கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் தொலைவழிக்கல்வியை வழங்காத பல்கலைக்கழகமே இல்லை எனலாம்.
மக்களுக்கு கல்விச்சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முறை, தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களின் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த பல்கலைக்கழகங்களில் அரசுத்துறை பல்கலைக்கழகங்ளும் அடங்கி விடுகின்றன.
இவ்வாறு தொலைதூர கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக தொலைக்கல்வி குழு (DISTANCE EDUCATION COUNCIL) அமைக்கப்பட்டது.
தொலைநிலைக்கல்வியை தரமுள்ளதாக்கும் இந்த திட்டத்தின்கீழ் கல்வித்திட்டங்களுக்கான தரநிர்ணயம் செய்யப்பட்டது. உதாரணமாக தொலைநிலைக்கல்வி மையத்தில் இருக்க வேண்டிய பேராசிரியர்களின் எண்ணிக்கை முதலானவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வணிக மேலாண்மை(MBA), கணிப்பொறியியல் (MCA) போன்றவற்றில் மேல்நிலை பட்ட வகுப்புகளை மூன்றாண்டுகள் நடத்த வேண்டும் என்றும் அவற்றில் இடை நிலைத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற திட்டங்களும் வலியுறுத்தப்பட்டன.
ஆனால் எந்த நல்லத்திட்டங்களையும் போல, இந்த திட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் என்ன முடிவு என்பதற்கு எந்த விவரமும் இல்லை.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், தொலைவழிக்கல்வி வழங்குவதற்குமுன், இந்த தொலைக்கல்வி குழுவிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களை எச்சரிக்கும் விதமாக பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

எனினும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த தொலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், சேலம் வினாயகா மிஷன் பல்கலைக்கழகமும் மட்டுமே அவற்றின் அனைத்து தொலைக்கல்வி படிப்புகளுக்கும் இந்தக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியத்துறை (B. Ed) பட்டப்படிப்புக்கு மட்டும் தொலைநிலைக்கல்வி குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் பட்டங்களை கூவிக்கூவி விற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை.
இப்போதைய நிலையில் இந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பட்டயங்கள் பட்டங்கள் செல்லுமா? செல்லும் என்றால் தொலைநிலை கல்விக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு என்ன அர்த்தம்? அந்தப்பட்டங்கள் செல்லாது என்றால் பல்கலைககழகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவும், அரசும் என்ன செய்யப்போகின்றன?
இந்த முறையில் படித்து முன்னேறியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் இணையம் மூலமாகவும் இந்த கல்வி வழங்கப்படுகிறது. நாட்டில் தொலைவழிக்கல்வியை வழங்காத பல்கலைக்கழகமே இல்லை எனலாம்.

மக்களுக்கு கல்விச்சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த முறை, தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களின் பொருளீட்டும் வழியாக மாறிவிட்டது. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இந்த பல்கலைக்கழகங்களில் அரசுத்துறை பல்கலைக்கழகங்ளும் அடங்கி விடுகின்றன.
இவ்வாறு தொலைதூர கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக தொலைக்கல்வி குழு (DISTANCE EDUCATION COUNCIL) அமைக்கப்பட்டது.
தொலைநிலைக்கல்வியை தரமுள்ளதாக்கும் இந்த திட்டத்தின்கீழ் கல்வித்திட்டங்களுக்கான தரநிர்ணயம் செய்யப்பட்டது. உதாரணமாக தொலைநிலைக்கல்வி மையத்தில் இருக்க வேண்டிய பேராசிரியர்களின் எண்ணிக்கை முதலானவை இந்த திட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வணிக மேலாண்மை(MBA), கணிப்பொறியியல் (MCA) போன்றவற்றில் மேல்நிலை பட்ட வகுப்புகளை மூன்றாண்டுகள் நடத்த வேண்டும் என்றும் அவற்றில் இடை நிலைத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற திட்டங்களும் வலியுறுத்தப்பட்டன.
ஆனால் எந்த நல்லத்திட்டங்களையும் போல, இந்த திட்டங்களையும் அமல்படுத்தாவிட்டால் என்ன முடிவு என்பதற்கு எந்த விவரமும் இல்லை.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், தொலைவழிக்கல்வி வழங்குவதற்குமுன், இந்த தொலைக்கல்வி குழுவிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அங்கீகாரம் பெறாத பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களை எச்சரிக்கும் விதமாக பொது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

எனினும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இந்த தொலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகமான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், சேலம் வினாயகா மிஷன் பல்கலைக்கழகமும் மட்டுமே அவற்றின் அனைத்து தொலைக்கல்வி படிப்புகளுக்கும் இந்தக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியத்துறை (B. Ed) பட்டப்படிப்புக்கு மட்டும் தொலைநிலைக்கல்வி குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் பட்டங்களை கூவிக்கூவி விற்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இந்த தொலைநிலைக்கல்விக்குழுவின் அங்கீகாரத்தை பெறவில்லை.

இப்போதைய நிலையில் இந்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழ்கள் பட்டயங்கள் பட்டங்கள் செல்லுமா? செல்லும் என்றால் தொலைநிலை கல்விக்குழு வெளியிட்ட அறிக்கைக்கு என்ன அர்த்தம்? அந்தப்பட்டங்கள் செல்லாது என்றால் பல்கலைககழகங்களும், அவற்றை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவும், அரசும் என்ன செய்யப்போகின்றன?
-மக்கள் சட்டம் குழு
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!