Monday, December 12, 2011

சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்... மக்கள் கருத்து என்ன?

நீதியின் உயரம்
நேர்மையின் உறுதி
சென்னை உயர் நீதிமன்றம்


அறத்தின் கவசம்
அழியாத வெளிச்சம்
சென்னை உயர் நீதிமன்றம்


மேற்கே சூரியன் தோன்றி மறையலாம்
மேல்நோக்கி மழை பொழிந்து கழியலாம்
ஆனால் -
ஒரு நாளும் நீதி பிறழாது - சென்னை
உயர் நீதிமன்றம் வழுவாது


காசு பணங்கள் கடந்து நீதியைக்
காவல் புரிவது உயர் நீதிமன்றம்
கடவுள் நம்பிக்கை இல்லாத பேர்க்கும்
கடைசி நம்பிக்கை உயர் நீதிமன்றம்


ஆளவந்தாரை லட்சுமிகாந்தனை
ஆய்ந்து சொன்னது உயர் நீதிமன்றம்
ஆளவந்தோரின் நன்மை தீமையை
அறுதி செய்வதும் உயர் நீதிமன்றம்


உண்மைகள் கூடி சத்தியம் கட்டிய
உறுதிகொண்டது உயர் நீதிமன்றம்
உலகப் போரில் குண்டு விழுந்தும்
உடைந்து போகாத உயர் நீதிமன்றம்


ஆண்டவர் ஆள்வோர் யார் சொன்னாலும்
அசைந்து கொடுக்காத உயர் நீதிமன்றம்
அறங்களாலே சமூகம் காக்கும்
அரண்கள் அமைக்கும் உயர் நீதிமன்றம்!

-கவிப்பேரரசு(!) வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றம் குறித்து எழுதிய கவிதை இது.


தமிழ்நாட்டின் நீதி நிர்வாகம் குறித்து நீதிபதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய பொதுமக்களிடம் பத்திரிகைகள் உட்பட யாரும் கருத்து கேட்டதாக தெரியவில்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை வரி செலுத்தும் பொதுமக்களுக்கே உண்டு. (இந்தியாவில் நேர்முக வரியை விட மறைமுக வரியே அதிகம் வசூலாகிறது. இந்த மறைமுக வரியை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களே அதிகம் செலுத்துகின்றனர்) சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் அதிகார வரம்புக்குள் இயங்கும் தமிழ்நாட்டின் ஏனைய அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் டிரிப்யூனல் அமைப்புகளை குடிமக்கள் மதிப்பிட வேண்டும்.

அதற்கான களம் இது...  உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை!
கருத்துக்களும் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

Thagavalmani said...

http://www.kurunthagaval-1000.blogspot.com

Please watch this link also. This will helps you in many ways.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!