ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மூலமும், பர்சனல் லோன் மூலமாகவும் தனி நபர்களை சுரண்டுவதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆனால் அரசின் ஒரு துறையான மாநகராட்சிகளே இத்தகைய வங்கிகளிடம் சிக்குவதையும், இதன் பின்னணியில் உள்ள சர்வதேச சதிவலைப் பின்னலையும் மருத்துவர் ரமேஷ் அம்பலப் படுத்துகிறார். மாஸ்டர் பிளான் என்ற இந்த திட்டங்களுக்கான கருத்தாய்வு கூட்டமோ, கலந்தாய்வு கூட்டமோ மாநகராட்சியின் சமூக நல கூடங்களில் நடப்பதில்லை. அனைத்தும் தனியாருக்கு சொந்தமான குளிர்பதன வசதி செய்யப்பட்ட தனியார் விடுதிகளில்தான் நடைபெறுகின்றன.
இந்த செலவும் நம்மிடம்தான் வசூலிக்கப்படுகிறது. மருத்துவர் ரமேஷின் கட்டுரையை படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்:
நன்றி: சமூக விழிப்புணர்வு, கீற்று
-மக்கள் சட்டம் குழு