Monday, June 16, 2008

"மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்" - கருத்தரங்கம் : ஊடகங்களின் பார்வையில்...

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த செய்தி:




மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு விரோதமான போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல - ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு
.
சென்னை, ஜூன். 16-
.
மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
.
உணவே மருந்து
.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர், உணவு கொடுக்கும்போது அவரது குணம் சாப்பிடுபவருக்கும் வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் உணவுக்கும், மனித உறவுகளுக்கும் அப்படியொரு முக்கியத்துவம் இருந்தது.
.
``மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்-ஊறுபாடு இல்லை உயிர்க்கு'' என்ற திருக்குறளில், உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறளும் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல இந்த திருக்குறள் அமைந்துள்ளது.
.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல
.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே எல்லா விஞ்ஞானமும் உள்ளது. மனித உடலில் இந்த ஐம்பூதங்களும் உள்ளன. தசை, நரம்பு நிலமாகவும், பசி நெருப்பாகவும் இருக்கிறது. உடலில் நீர் ஓடுகிறது. மனிதன் இறக்கும்போது நிலத்தில் புதைக்கின்றனர். எரித்து சாம்பலை கரைக்க வேண்டுமானால் அதற்கு நெருப்பும், நீரும் தேவைப்படுகிறது. எல்லாமே மறுசுழற்சி முறையில்தான் அமைந்துள்ளன. எனவே, மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.
.
மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
.
இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.
.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகம் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:-
.
உணவுத் தட்டுப்பாடு
.
உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக் குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030-ம் ஆண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
.
நம் நாட்டில், 1980-ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 டன் (5 ஆயிரம் கிலோ) நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களும் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளும் வருவதில்லை.
.
சமுதாய விவாதம்
.
எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
.
இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.
இந்த கருத்தரங்கில் பூவலகின் நண்பர்கம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கு.சிவராமன், டெக்கான் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் பி.வி.சதீஷ், கிரேன் அமைப்பின் மண்டல திட்ட அதிகாரி ஷாலினி புட்டானி, வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்றார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையத்தின் பிரதிநிதி வக்கீல் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
.

நன்றி: தினத்தந்தி
.
மரபணு மாற்றத்துக்கு எதிர்ப்பு: இயற்கைக்கு மாறாக போவது நல்லதல்ல
.
சென்னை, ஜூன் 16: இயற்கைக்கு மாறாக போவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று மரபணு மாற்றத்திற்கு எதிரான கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சென்னையில் நேற்று "மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்: என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் மோகன கிருஷ்ணன் வரவேற்றார். டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி செயலாளர் சத்தீஷ், வெற்றிச்செல்வன், க்ரெய்ன் பிராந்திய திட்ட அலுவலர் ஷாலினி புட்டானி ஆகியோர் பேசினர்.
.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவானவன் மனிதன். இறுதியில் பஞ்சபூதத்திடமே சென்று சேர்கிறோம். இதற்கு எதிராக இருப்பதுதான் மரபணு மாற்றம். இயற்கைக்கு மாறாக போவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது இல்லை. உலகநாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின்படி, எந்தவித அறிவியல் கண்டுபிடிப்பும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உறுதிசெய்யப்படும் வரை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
.
தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் நம்மாழ்வார் பேசியது:
உலகில் உணவுத் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 88 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உணவு உற்பத்தியை மேலும் 50 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே 2030ல் உலகின் உணவுப் பொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பசுமைப் புரட்சி என்ற பெயரால் மேலைநாட்டு தொழில்நுட்பம் இந்தியாவில் புகுந்ததால் இந்தியாவில் விவசாயம் பாழ்பட்டுள்ளது. 1980ல் ஒரு ஏக்கரில் 5 டன் உற்பத்தி இருந்தது. ஆனால் அது தற்போது 800 கிலோவாக குறைந்துள்ளது. உரமும், பூச்சிக் கொல்லி மருந்தும் நம் உடலை நஞ்சாக மாற்றிவருகின்றன.
.
எந்த அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை சமுதாயத்தில் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். மரபணு மாற்றத்தால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளை இழந்துள்ளோம். நிலம், விவசாயி, மக்கள் என அனைத்துத் தரப்பையும் பாதிக்கும் மரபணு மாற்றத்தால் கிடைக்கும் எதையும் ஏற்கக் கூடாது. இவ்வாறு நம்மாழ்வார் பேசினார்.
.
மனித உரிமை சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பி. சுந்தரராஜன் நன்றி கூறினார்.
.
நன்றி: தினகரன்

"கம்பெனி' ஆதிக்கம் ஒழியவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி
.

சென்னை, ஜூன் 15 : இந்தியாவில் இன்னும் கம்பெனி ஆதிக்கம் ஒழியவில்லை. சுதந்திரத்துக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின் மரபணு மாற்று தொழில்நுட்பக் கம்பெனிகள் ஆதிக்கம் உள்ளது. இது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.


மனித உரிமை சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்" கருத்தரங்கில் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
.
நகரில் உள்ளவர்களிடம் அரிசி என்றால், அது எந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கிறது என்பார்கள். என் குழந்தைகளிடம் நெல் எங்கு விளைகிறது என்றால், முருகன் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் என்கிறார்கள். அந்த அளவுக்கு உணவு முறைகள் மாறிவிட்டன.
.
இந்தியர்களின் வாழ்க்கை முறை "உணவே மருந்து, மருந்தே உணவு" என இருந்தது. உணவைக் கடவுளாக போற்றினார்கள். உடல் மட்டும் உணவால் அமைந்தது அல்ல. எண்ணங்களும் உணவால் உருவாகின்றன.
.
திருவள்ளுவர் உழவு பற்றி அதிகாரம் வகுத்தார். பயிருக்கு அதிகாரம் கொடுத்தார். ஆனால் உணவு என்பதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மருந்து என அதிகாரம் கொடுத்தார்.
.
மரபணு மாற்றம் பற்றி இப்போது பேசுகிறோம். ஆனால் அன்றைக்கே வள்ளுவர் கூறிவிட்டார். மாறுபாடு இல்லாத உண்டி, ஊறுபாடு இல்லை உயிருக்கு என்றார். மாறுபாடு இல்லாத உண்டி என்றால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு, மரபணு மாற்று இல்லாத உணவு எனப் பொருள்படும்.
.
உலகம் தோன்றியற்கு சுழற்சி முறைதான் அடிப்படை உண்மை. எந்தப் பொருளை எடுத்தாலும் அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களுக்குள்தான் வருகிறது. இதில் நமது உடலுக்கும் தொடர்பு உள்ளது. பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் உருவான உடலை இறந்த பின்னர் நிலத்தில் புதைக்கிறோம் அல்லது நெருப்பில் எரித்து சாம்பலைத் தண்ணீரில் கரைக்கிறோம்.
.
இந்த சுழற்சி முறைக்கு எதிரானதுதான் மரபணு முறை. இதனுடைய போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல. மரபணு மாற்று முறையில் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் பற்றி குறிப்பிட்டார்கள். 1948க்கு முன் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் இருந்தது. இப்போது வேறு கம்பெனிகளின் ஆதிக்கம் வந்துள்ளது. கம்பெனி ஆதிக்கம் என்பது பழகிவிட்ட ஒன்றாகிவிட்டது என்றார் நீதிபதி ராமசுப்பிரமணியன்.
.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன், தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் கோ.நம்மாழ்வார், கு.சிவராமன், பி.பி.சதீஷ்வெற்றிச்செல்வன், ஷாலினி புட்டானி, பி.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
.
"மரபணு மாற்றம்: 200 வகை பறவை இனம் அழிவு"
.
சென்னை, ஜூன் 15 : மரபணு மாற்ற முறையால் 200 வகையான பூச்சி தின்னும் பறவை இனங்கள் அழிந்து விட்டன என தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் கோ.நம்மாழ்வார் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கருத்தரங்கில் நம்மாழ்வார் பேசியதாவது: உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பெரிய பிரச்னையாக உள்ளது. 300 கோடி பேருக்கு உண வுக்கு உத்தரவாதம் இல்லை. 88 கோடி பேர் பட்டினி கிடக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடி அதிகரிக்கும்.
33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. தற்போதைய உணவு உற்பத்தியில் மேலும் 50 சதவீதம் அதிகரித்தால்தான் 2030ல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என ஆய்வு கூறுகிறது.
.
"பசுமைப் புரட்சி' என்ற பெயரால் மேலை நாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் புகுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தின் வளம் கெட்டு விட்டது. 5 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நில வளம் 60 ஆண்டுகளில் கெட்டு விட்டது.
.
அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு. இதுதான் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. நெல்லின் அடிப்பகுதியை நிலத்துக்கும், நடுப்பகுதியான வைக் கோல் மாட்டுக்கும், நெல்மணிகளை வீட்டுக்கும் கொண்டு சென்றோம். இதைப் பின்பற்ற தவறியதால் உற்பத்தி அளவு குறைந்து விட்டது. உணவுப் பழக்க வழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் உணவை நஞ்சாக்கி வருகின்றன. சில கம்பெனிகளின் சுய லாபத்துக்காக உணவை நஞ்சாக்கும் போக்கைத் தடுக்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும்.
.
மரபணு மாற்றத்தால் 200 வகையான பூச்சி தின்னும் பறவைகள் இனத்தை இழந்துள்ளோம். நிலம், விவசா யிகள், மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் மரபணு மாற்றத்தின் மூலம் கிடைக்கும் எதையும் ஏற்கக் கூடாது என்றார் நம்மாழ்வார்.
.
நன்றி: தினமணி
.


மரபணு மாற்று விவசாயம் நல்லதல்ல: நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேச்சு

.
சென்னை, ஜூன் 16-

.

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேசினார்.

.

மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

.

அப்போது அவர் கூறியதாவது:

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

.

உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின்,அவரது உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறள் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல் இந்த திருக்குறள் அமைந்துள்ளது.

.

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.

.

மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

.

இவ்வாறு நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் கூறினார்.

.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:

.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேசன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழி மறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக்குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030ம் ஆண்டில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

.

நம் நாட்டில் 1980ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்கள் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்றுப் பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகள் வருவதில்லை.சமுதாய விவாதம்எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடை முறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

.

இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.

நன்றி: தீக்கதிர்
.
"மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடந்தது. அதி்ல் பேசுகிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அதை வீடியோவில் பதிவு செய்கிறார் ஒரு பெண்"



நன்றி: தமிழ்முரசு

.

இந்த கருத்தரங்கில் தமிழ் வலைபதிவர்கள் சார்பில் தோழி லிவிங்ஸ்மைல் வித்யா கலந்து கொண்டார். அவருக்கு எங்கள் நன்றி.

.

-மக்கள் சட்டம் குழு

5 comments:

Anonymous said...

Chumma Test

Anonymous said...

”மரபணு மாற்றத்தால் 200 வகையான பூச்சி தின்னும் பறவைகள் இனத்தை இழந்துள்ளோம்” இதற்கு நம்மாழ்வார் ஆதாரம் தருவாரா.
பெங்களூர் தக்காளி மரபணு மாற்றப்பட்ட தக்காளி வகையல்ல.

Anonymous said...

//”மரபணு மாற்றத்தால் 200 வகையான பூச்சி தின்னும் பறவைகள் இனத்தை இழந்துள்ளோம்” இதற்கு நம்மாழ்வார் ஆதாரம் தருவாரா.//


சென்னை போன்ற பல இடங்களில் சிட்டுக்குருவி போன்ற பறவைகளை பார்க்க முடியவில்லை.

//பெங்களூர் தக்காளி மரபணு மாற்றப்பட்ட தக்காளி வகையல்ல.//

சரி அப்படி என்றால் அவை நாட்டு தக்காளியிலிருந்து வேறுபட்டிருப்பது ஏன்?

Anonymous said...

பெங்களூர் தக்காள் அப்பகுதியில் விளைகிற தக்காளி. அது நாட்டுத்
தக்காளியிடமிருந்து ஏன் வேறுப்பட்டிக்கக் கூடாது.அரிசியில்
ஆயிரம் வகைகள் இருந்தால் அவற்றிடையே எத்தனையோ வேறுபாடுகள் இருப்பது போல்தான்
இதுவும்.தக்காளி இந்தியாவில் தோன்றிய பயிர் அல்ல.அதற்காக
அதை சாப்பிடாமல் இருக்கிறோமா.

மக்கள் சட்டம் said...

சன் நியூஸ் தொலைக்காட்சியின் வீடியோ பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!